பக்கம் எண் :

59

 

தாவி தென்றொரு தரணிபன் றனிவழி புகுந்தங்
கோவ லில்பெருந் துன்புழந் தொண்ணிலை தவறிக்
காவ லன்பெருங் கருணையால் நெறிகடைப் பிடித்து
வீவி லாப்பதத் தெய்தினன் சுரர்கணம் வியக்க.    37

 
 

உத்த மோத்தமன் சாமுவே லொண்டவன் ஜீவன்
முத்த ராமெலி யாவெலி சாவெனு முநிவர்
சித்த னைசயா வாதிய தீர்க்கரோர் மூவர்
வித்த கஞ்செறி தானியே லோசியா மீகா.         38

 
 

ஆய வித்தகு குரவரு மவர்வழி பிடித்த
தூய ரும்பண்டு பூருவ பாதையைத் துலக்கிப்
பேய டர்ந்தவிப் பிரபஞ்ச மாயத்தைப் பிளந்து
காய நீத்துயர் கதியர சாட்சியைக் கலந்தார்.      39

 

                       பூர்வபாதைப் படலம் முற்றிற்று.


 9. கவிசேஷமார்க்கப் படலம்
 

 

தொன்று தொட்டுள திருச்சபைக் குரவருந் துகடீர்
நன்றி கொண்முது தீர்க்கரு நலத்தகு வாணாள்
சென்று போயினர் வருதிறன் றெரிப்பவ ரில்லர்
நின்று போயின வற்புதங் களுநில வுலகில்.       1

 
 

பூர்வ பாதையை லௌகிகப் பெரும்புதர் புதைப்பத்
தீர்வ ருங்கொடு விலங்குகள் தீவிடப் பாந்தள்
பேர்வு றாதவ ணுறைதலிற் பிறங்குத லின்றித்
தூர்வ தென்றுகண் டாரண ருளந்துளக் குற்றார்    2

 
 

தீர்க்க மெய்விசு வாசிகள் தீர்க்கர்சொற் றெருளடோர்
பார்க்கி ரக்ஷணை யீட்டவும் பார்த்திவன் மருமான்
மார்க்க மிங்கிதைப் புதுக்கவும் வருவர்மற் றொனா
கார்க்கு லம்வரக் காண்குறாப் பயிரினுட் கரிவா.   3

 
 

வள்ள லாரிளங் கோமகன் வரும்பதி தெரிக்கும்
வெள்ளி யொன்றுள தென்றதை விரும்பினர் நாடி
நள்ளி யோர்சில ரடியுறை நல்லன தெரிந்து
தெள்ளி தோர்ந்தெதிர்ந் திருந்தனர் பூருவ திசையில். 4