பக்கம் எண் :

61

 

கலக மிட்டல கைத்தொழும் பாயறங் கைவிட்
டுலகை நச்சியிங் குழல்நர கீடத்துக் குயிரீந்
திலகு வான்பத மேற்றவந் திறுத்தநம் மீசன்
அலகில் பேரன்பி னளக்கரை யளந்தறி பவர்யார்.  

13
   
 

உன்ன தாதிப னொருசுத னுவரிநீ ருலகப்
புன்ன ரங்களைப் புரப்பலென் றேன்றுபோம் புதுமை
என்ன வென்னவென் றாயிரக் காலெடுத் தேத்திப்
பன்ன ருந்துதி பகர்ந்தனர் வான்கணம் பழிச்சி.    

14
   
 

ஆழ்ந்த ஜீவநீர் நதிப்பெருக் கதோமுக மாகித்
தாழ்ந்த பூதலப் படுகரிற் பாய்ந்ததுந் தழைத்துக்
காழ்ந்த நித்திய ஜீவகற் பகச்சினை ககனம்
போழ்ந்து பாருறப் பணிந்தது மெத்தனை புதுமை.   

15
   
 

               வேறு

 
   
 

மையார்கலி புடைசூழ்புவி வளைதீவினை யிருளும்
பொய்யாரணப் புலையார்திமி ரமுந்தீவிடம் பொதிந்த
பையாடர வின்சீறுவெம் படமுஞ்சிதை வெய்த
மெய்யாரணச் சுடர்மானிட விதயாம்பரம் விளங்க.   

16
   
 

தருமந்தலை யெடுக்கப்பட வியிற்சத்தியந் தழைக்க
அருமந்தமெய்ச் சுருதித்தொனி யவனித்தலை சிறப்ப
ஒருமந்தையின் மறியாயருள் ளுவந்தேத்திசை யோங்கத்
திருமந்திர முறைவாழ்த்தொலி ஜெயபேரிகை கறங்க.

17
   
 

கள்ளம்புரி யலகைக்கிறை கைகால்வில விலக்க
உள்ளம்பறை யறையத்திகி லுற்றாருயிர் நடுக்கங்
கொள்ளக்கரி முகங்குப்புறக் கொடுந்தீவினை குலைய
அள்ளிக்கதிர் வீசுஞ்சுட ரருணோதய மிதென.      

18
   
 

வானோமகி தலமோசுடர் மதியோவயங் கொளிர்வான்
மீனோவிரி கடலோமழை முகிலோவொரு விதியில்
ஆனாநெறி யமைத்தாக்கிய வகிலாண்டவச் சுதனோர்
ஊனாடிய திருமேனிகொண் டுதித்தாருல குவப்ப.    

19
 
 

மறையார்த்தது மறையோதிய வரம்பார்த்தது ஞானத்
துறையார்த்தது சன்மார்க்கமெய்த் துணிபார்த்தது சுகிர்த
நிறையார்த்தது நலமார்த்தது நிலையாயர க்ஷணிய
முறையார்த்தது கதியாக்கமிம் முதுமாநிலத் துறவே.  

20