|
அந்தோவறக் கொடுந்தீவினைக் கிலக்காகிய வவனி
வெந்தீடழி நரகம்புக விடுகிற்கில னென்னா
நந்தாதிரும் புலைமல்கிய நடலைப்பிர பஞ்சத்
தெந்தாயா சிளங்கோமக னிறுத்தாரிது வென்கொல்.
|
21
|
|
|
|
|
துன்பம்படு
துயர்நிந்தனை சுடுசொல்வசை யாதி
தன்பங்குறத் தளராதொரு தலையாப்பிறர் தம்மைப்
பொன்போற்பொதிந் தவரின்னுயிர் புரந்தாதரம் புரிவர்
அன்பின்றலை நின்றோர்செயு மாண்டன்மையி தன்றோ.
|
22 |
|
|
|
|
வேறு
தீமுக னுய்த்தவெஞ்
சிறைக்குள் ளாயயர்
பாமரத் தூறடர் படுகர் வைப்பிது
கோமகன் சேவடிப் பதுமங் கோத்தலிற்
பூமுக மெனப்பெயர் பொலிந்த தாமரோ.
|
23 |
|
|
|
|
பேயடிப்
படுத்திய பிரபஞ் சத்தருக்
காயது குடித்தன மமரர் நாட்டென
நாயக னிறுத்தமை குறித்து நண்பொடு
கூயினர் திசைதிசை குறிக்கொண் டாரணர். |
24 |
|
|
|
|
ஆண்டகை
வானநாட் டரசன் மைந்தனைக்
காண்டொறுங் காண்டொறுங் களிப்புக் கைமிகத்
தேண்டிர க்ஷணைபுரி திருக்கு மாரனென்
றீண்டினர் புனிதசேத் திரத்தி லெங்குமே. |
25 |
|
|
|
|
உத்தம
நூனெறி யுவந்த தொண்டர்பால்
நித்திய ராஜ்ஜிய நிருப னின்மல
புத்திர னெனவிசு வாசம் பூண்டுமெய்ப்
பத்திசெய் தடித்துணை பரவி நின்றனர். |
26 |
|
|
|
|
தீர்த்தனென்
றற்புதச் செயலுந் தெய்விக
வார்த்தையு முரைசெய மருண்ட மாந்தரும்
பார்த்தலை யிறுத்தவோர் பரம சற்குரு
மூர்த்தமென் றருள்பெற முடுகிக் கிட்டினார். |
27 |
|
|
|
|
ஆயிடை
யருள்விழி பரப்பி யாண்டகை
மாயிரு ஞாலத்து மாந்தர் சீர்மையும்
பேயர சாளுகை நடக்கும் பெற்றியும்
நாயகக் கதிவழி நடப்பி லாமையும்.
|
28 |