பக்கம் எண் :

64

   

அத்தியை யடுக்கிமென் றசைசெஞ் சோரியென்
றித்தகு சாந்துகொண் டிசைத்துப் பத்திசெய்
பித்தியீ டேற்றமென் பெயர்பு னைந்துதம்
முத்திரை குயிற்றினர் முறைமை யாலரோ. 37

   
  இடந்தொறு மிடந்தொறு மேர்கொண் மாளிகை
மடம்பல சத்திர மரபி னாக்குவித்
தடங்கலும் பணிபுரி யறவர் தம்மையும்
உடம்படி வாங்கியூ ழியத்தி லுய்த்தனர். 38
 
  வழிவிடா யாற்றிவான் வழிவந் தோருக்கென்
மொழிவழி போனக முறையி னூட்டுமின்
அழவுறா விருநிதி யளித்தும் யாண்டுநீர்
பழிவராக் காமின்மற் றெனவும் பன்னினார். 39
 
  தெள்ளிய நூல்வழிக் கிடையிற் சென்றுசேர்
கள்ளமார்க் கங்களைத் தெரியக் காட்டுகை
ஒள்ளிய தம்பநட் டுண்மை யாத்திரி
எள்ளுறாப் பொன்னெழுத் திலங்கத் தீட்டினார். 40
 
  மறைவியாக் கியானமா ளிகையில் வைதிக
முறையறி வுறுத்தமுற் படுபல் காட்சிகள்
துறைதொறு மமைத்தவை விளக்கிச் சொல்லவோர்
நிறைமொழிக் குரவனை நிருமித் தாரரோ. 41
 
  இவ்வுல குக்கெதி ரிடுக்க வாயில்சேர்
செவ்விய நெறிப்படு திருமு கப்பினில்
ஒளவியப் பகைஞரு மவிக்கொ ணாதவோர்
திவ்விய வொளிக்குறி திகழ்த்தி வைத்தனர். 42
 
  மாரணப் படுகரின் மாயச் சந்தையின்
பாரிடச் சூழலின் மோசப் பாங்கரிற்
கோரணி முயங்குறிற் குறிக்கொண் டொல்லையெம்
ஆரண ருடனமர்ந் தருடும் யாமென்றார். 43
 
  மாசில்சீர் மாண்சுவி சேஷ மார்க்கத்தை
ஆசற விளக்கிப்பின் னலகை யீட்டிய
பாசறைப் படைஞரைப் பரிவிற் பார்த்தருள்
நேசமோ டழைத்திவை நிகழ்த்தன் மேயினார். 44