| |
உளம்ப
டப்பகுத் தோதிய வுன்னத
விளம்ப ரத்தைவெ றுத்தவன் வெண்மணற்
களம்ப டுத்தவிற் கட்டழி மென்றுனா
வளம்ப டுத்தம தியிலி போலுமால். 77 |
| |
|
| |
இத்தி
றத்தன வேகசர் வேசுரன்
சித்த மென்றுதி ருத்தகத் தெள்ளிதின்
வித்த கக்கனி வாயிதழ் விண்டனர்
சுத்த மெய்ச்சுவி சேஷவுத் துங்கரே. 78 |
| |
|
| |
சீரு
றுங்கதி சேர்வழி யீதென
நேரி லேயுப தேச நிகழ்த்திமேல்
ஒரும் பற்பலு வமைகொ டுண்மையைத்
தேரு மாறுதெ ரிக்கலுற் றாரரோ. 79 |
| |
|
| |
வேறு
மன்பதைகாள்
கிருஷிகன்வெள் ளாண்மைசெயத் தகும்
பருவம் வாய்த்ததென்னா
நன்புலத்து வித்திடுங்கால் வழியருகும் பார்நிலத்தும்
நவைத்தூறெஞ்சாக்
கொன்புலத்துஞ் சிதறுண்ட சிற்சிலவித் ததரருகு
குளித்தவற்றைப்
புன்பறவை விரைந்தணுகிப் பொறுக்கிநுகர்ந் தனவிதனைப்
புந்திசெய்மின். 80
|
| |
|
| |
பார்நிலத்துப்
புதைந்தவித்தங் குரித்தெனினும் வேரூன்றப்
பசுமண்ணின்றிக்
கூர்வெயிலிற் றீந்துகரிந் தனமுட்டூ றுக்கிடையிற்
குளித்தவித்து
நேர்வளர்ந்து நெருக்குண்டு பயன்படா தொழியநன்செய்
நிலத்தவோங்கிச்
சீர்பெறநன் மணிமுற்றி யொன்றுநூ றாயபயன்
றிகழ்த்திற்றோர்மின். 81 |
| |
|
| |
மற்றொருவன்
மறுக்களைந்து நல்வித்துப் புலந்தெளித்து
மறையவாங்கே
உற்றொருவ னள்ளிரவிற் களைவித்திக் கரந்தேக
வுபயவித்தும் |