பக்கம் எண் :

70

  தெற்றெனவங் குரித்தோங்த் தெரிந்தெஜமான் மற்றிவற்றைச்
     சேதியாதீர்
முற்றவிடுங் கொய்பருவத் தெறிந்தெரிவா யிடுதுமென
     மொழிந்தான்றேரில். 82
 
  வித்துபவன் யான்புலமு முலகாகும் வித்துபர
     ராஜ்ஜியத்தின்
புத்திரராங் களைதேரிற் பொல்லாங்கன் புதல்வரதைப்
     புலங்கொண்டுய்த்த
சத்துருவும் பைசாச மறுப்புலக முடிவரிவோர்
     தாவில்தூதர்
உத்தமர்மெ னிலைசேர்வர் களைபோல்வா ரெரியுண்ப
     ருண்மையோர்மின். 83
 
  நுண்ணியவோர் கடுகுவிதை நிலத்தூன்றி முளைத்தோங்கி
     நோன்றாளூன்றி
விண்ணிலவு புள்ளுறையுந் தருவாகு மென்றுநம்மான்
     விதந்ததாயில்
நண்ணரிய பரலோக ராஜ்ஜியமு மொருவனுள
     நண்ணிநிற்பின்
எண்ணரிய மனுக்குலங்க ளீடேறு நெறித்தாகு
     மிதயத்தூன்றி. 84
 
  புளித்தசிறு திரண்மாவா லறப்பிசைந்த மாமுழுதும்
     புளிப்பாமென்று
தெளித்தவுரைப் பொருடெரியி லோடதியாற் பாலுறையுஞ்
     சீர்மையென்ன
அளித்ததிரு வருள்பெற்ற வவனாலவ் வருட்சார
     மயலார்க்கெய்தி
ஒளித்தலைவான் கதிபெறுபக் குவமடைவ ருண்மைவெளி
     யுய்த்ததாமால். 85
 
  வைத்தநிதித் திரள்கண்டோன் மறைத்துரிமை யாவும்விற்று
     வழங்கியேனும்
அத்தகுநன் னிலங்கொள்வ னருவிலைநித் திலங்கண்டோ
     னவ்வாறாகக்
கைத்தலத்த பொருள்வீசிக் கவர்வனென்ற திருவசனக்
     கருத்தையோரில்
உத்தமராஜ் ஜியம்விழைந்தோ னொல்லைவழிப் படுவனுல
     கொருங்குவர்த்தே. 86