பக்கம் எண் :

71

  முன்னீர்புக் குலவுசல சரங்களைத்தன் னகடுமுட்ட
     முகந்துவாரிச்
சென்னீர்மை வலைபோலுந் திவ்வியராஜ் ஜியம்வலையிற்
     சேர்த்தவற்றுள்
நன்னீர்மை யுளதெரிந்து நவைபோக்கு மாறுலக
     நாளாந்தத்தில்
துன்னீரர் தமையெரியிட் டறவோரைத் துரியநிலை
     தொகுப்பார்தூதர். 87
   
  தன்கடனைத் தனக்கிரங்கித் தரணிபன்மன் னித்தபெருந்
     தகையோராத
வன்கணன்றன் கடனாளி தனைப்பிடித்துக் குரல்வளையை
     வலிந்துபற்றி
என்கடனை யிறுவென்றா னிறைவனறிந் தவளையிருஞ்
     சிறையிலிட்டான்
நன்குபிறர் பிழைசமிக்கில் நம்பனுநும் பிழைசமிப்பர்
     நலத்தையாய்மின். 88
 
  முந்திரித்தோட் டத்துதயந் தொடங்கியொத்து வேலைசெய்த
     முறையினோர்க்கும்
நந்துபதி னொன்றாய மணிமட்டும் வந்துபணி
     நாடியோர்க்கும்
வந்ததிபன் முழுக்கூலி வழங்கலுமுன் னவர்திருகி
     வாதுசெய்யத்
தந்தனன்சொற் படிகூலி யென்னுடைய தெனதிஷ்டஞ்
     சரிபோமென்றான். 89
 
  முழுக்காத லுடையீரா யிப்பொருளைக் கருத்திருத்தி
     முனைவன்சித்த
ஒழுக்காறு கடைப்பிடித்துக் கிடைத்ததுவே போதுமென
     வுவந்துநாளும்
அழுக்காறு புறம்போக்கி வழிபடிற்பிந் தினருமுந்தி
     யமலராஜ்யம்
இழுக்காது சென்றடைவர் முந்தினர்பிந் தினராவ
     ரிதயத்தோர்மின். 90
 
  தந்தையிது செய்யென்னச் செய்யேனென் றுடன்மறுத்தறுஞ்
     தனயன்பின்னர்ச்
சிந்தைநொந்து செய்தனன்மற் றொருதனயன் செய்வலென்
     செய்யானிந்த