| |
மைந்தரில்யார்
நல்லனெனில் தந்தைசொன்ன வாறுசெய்த
மகனேயென்பீர்
நந்தருமெய்ப் பொருடெரிப்ப லொத்திருந்துஞ் செய்யாது
நடிப்பீர்கேண்மோ. 91 |
| |
|
| |
சொல்லாலுஞ்
செயலாலுந் துட்டராய்த் திரிந்திராஜத்
துரோகியாய
அல்லாரே விளம்பரங்கேட் டுளந்திரும்பி யூர்த்தநெறி
யடுப்பாரானார்
நல்லார்போ லகத்திருந்தும் நன்றிகெட்டுப் பிரபஞ்ச
நடலைநச்சும்
பொல்லீரே யெல்லீரு மென்றினிநீர் விசுவசிப்பீர்
புந்திசெய்மின். 92 |
| |
|
| |
மிக்கசம்பத்
தொருதலைவன் செழித்தோங்கு முந்திரிகை
வியன்புலத்தைத்
தக்கபொறுப் புப்பேசி யொருசிலர்பால் விடுத்தேகச்
சதிசெயன்னார்
பக்குவகா வத்துரிமை பெறவந்தோர் தமைக்கொன்றும்
பழிக்கஞசாமல்
உக்கிரமாய்த் தலைவனொரு புதல்வனையுங் கொலைசெய்தா
ருதிரஞ்சிந்தி. 93 |
| |
|
| |
இப்பெரிய
பாதகருக் கெப்பெரிய தண்டனைதா
னிடத்தகாதென்
றொப்புரைக்கின் றீருணர்மின் பரலோக ராஜ்யமினி
யும்பானின்றும்
அப்புறமாய்த் தனக்குரிய நற்கனியைத் தருவோர்பா
லடையுமென்றார்
செப்பரிய திரியேக சர்வேசன் றரவந்த
தேவமைந்தன். 94 |
| |
|
| |
திருந்தியசெங்
கோலரசன் றன்மகற்குக் கலியாணஞ்
செய்தகாலை
பொருந்தினர்க்கு விருந்தமைத்து நுகருவிப்பா னழைத்துவரப்
போக்கினோரை
வருந்தவடித் துயிர்க்கொலையும் வகுத்தனர்மன் னவன்றேர்ந்தம்
மறவர்தம்மைப்
பருந்தினுக்கு விருந்தூட்டி யெரிகொளுவி யூரையும்பாழ்
படுத்தான்சீறி. 95
|