| |
அரையனுழை
யரையேவி யாண்டாண்டு திரிவோரை
யழைத்துவந்து
வரைவின்றி யாவருக்கும் மங்களவத் திரநல்கி
மகிழ்ந்தூட்டுங்கால்
நிரையூடங் கொருவனுக்குத் தானளித்த துகிலில்லா
நெறியையாய்ந்து
விரைவிலிருட் சிறையுய்த்தான் பலரழைக்கச் சிலர்தெரிந்த
விதத்தையோர்மின். 96 |
| |
|
| |
அரும்பரம
ராஜ்ஜியத்துக் கழைக்கப்பட் டவரெல்லா
மருகரல்லர்
விரும்பியுளந் திரும்பிநெறி விலகாது முன்சென்று
விபுதநாட்டுப்
பெருந்தகைக்குப் பிணக்கின்றி வழிபடுவோ ரெவரவரே
பெருமான்சித்தந்
தெரிந்துகொளப் பட்டவர்மற் றவருலகிற் சிலராவர்
தெரியுங்காலை. 97 |
| |
|
| |
அதிபதியா
மணவாளன் கலியாண மணவறையை
யடுக்குங்காலத்
தெதிர்கொள்வான் காத்திருந்த பத்துக்கன் னியரிலைவ
ரெண்ணெயில்லா
மதியிலிகள் கண்டுயில மதியுடையார் தீவத்தி
மரபினேந்தி
விதிமுறையே வரவெதிர்ந்துட் புகுந்தனர்மற் றையர்வெளியே
விடுபட்டாரால். 98 |
| |
|
| |
மற்றிந்தப்
பொருள்தெரியில் வானரச னடுத்தீர்வை
வழங்குங்காலந்
தெற்றெனநீ ரறியகிலீர் மதியிலர்போல் விசுவாசத்
தீபம்போக்கி
முற்றுலக மயல்கொண்டு துயிலாதீர் விழித்திருமின்
மோசம்போகீர்
இற்றிதுகாண் பொருளென்ன விளவரசாங் குமரேச
னியம்பிப்பின்னும். 99 |
| |
|
| |
திருவளர்க்கு
மொருதனிகன் மறுதேசம் போய்வரற்குச்
சிந்தையுற்று
மருவியதன் றிரவியத்தைக் காரியஸ்தர் வசமாக
மரபினீந்திப் |