பக்கம் எண் :

74

பெருநிதியை யாதாயப் படுத்திவைமி னெனப்பணித்துப்
     பெயர்ந்துபோனான்
வருமவதி தனில்வந்தான் காரியஸ்த ரிடங்கணக்கு
     வாங்குங்காலை.                              100
ஐயவிரு வேம்பொருளை யொன்றிரட்டி யாக்கினமென்
     றளித்துநிற்ப
மெய்யரிவ ரெனக்கண்டு மேம்படுத்தி மற்றவனை
     விளித்தியாதென்னச்
செய்யில்விதை யாதறுக்கத் தேடும்யஜ மாநனெனத்
     தெரிந்துதந்த
நொய்யநிதி புதைத்துவைத்தேன் மற்றிதனைக் கொள்கவென்
     று நுவன்றானாக.                             101
தன்பொருளைப் புதைத்துநஷ்ட படுத்தியவிச் சழக்கனைக்கா
     றளைந்துநீவிர்
துன்பமிகு மிருட்சிறையி லுய்க்கவென்றா னுழையரையச்
     சோம்பியீந்த
மன்பொருளை யுள்ளவற்கு வழங்கினான் பொன்வணிகன்
     மரபீதாக
என்பொருள்மற் றெனிலுள்ளோர்க் கீவரிலோர்க் குள்ளது
     மின் றென்றாரீசன்.                           102
மெய்யறிவு மெய்ஞ்ஞான மிகுசெல்வஞ் சொல்வன்மை
     மேம்பாடாதி
வையகத்தி லவரவர்க்கு வானரச னருளளிக்கும்
     வரமாமன்றோ
உய்யுநெறி யுபயோகித் தூழியஞ்செய் திடல்கடமை
     யுபேக்ஷிப்பேரரைப்
பொய்யிகந்து வருநடுநா ளிருட்பிழம்பு புகுவிக்கும்
     புந்திசெய்மின்.                              103

               வேறு

நானிலங் காணி பூமி நன்குறு பயிராய் முற்றி
மேனியு மதிக மாக விளைந்தன தொகுத்துத் தோன்றுந்
தானியக் குவையைக் கண்டு தகவிலாப் புத்தி யீனன்
கோனருள் குறியா னாகித் தன்னுளே குணிக்க லுற்றான். 104