| |
பாசத்
தளையும் படுசெல் வமுநீள்
மோசப் படுபுன் மதியும் முடுகி
நாசப் பரவை நடுவுய்த் தவினி
நீசக் கனனீந் துவதெந் நெறியான். |
129 |
| |
|
|
| |
சாகாப்
புழுவுந் தணவாத் தழலுங்
கூகூ வெனநொந் தலறுங் குரலும்
ஏகா வெனைவிட் டினியோ ரிறையும்
போகா வுயிர்பொன் றுவதென் றினியே. |
130 |
| |
|
|
| |
ஞாலத்
தொருசில் பகல்நன் றில்வினை
ஆலத் தைநுகர்ந் தெனதா ருயிரைக்
காலச் சுழல்சக் கரமீர்ந் திடுபா
தாலக் கடல்வீழ்ந் துதவிப் புறுவேன். |
131 |
| |
|
|
| |
பெருமைத்
திடரே றியபித் தனென
கருமத் தை¬ï¤னைந் துககோ ளபதித்
தருமத் துரைநீ திதமத் திரளை
நிருமித் ததெனக் கெனிகழ்த் துவதே. |
132 |
| |
|
|
| |
அகல்வா
னரச னருள்கோ மகனைப்
புகல்புக் குயவோர் பொழுதுண் டுகொலோ
பகலே யெனிதிக் குவைபா ருளகொண்
டுகவா யருணா ழிகையொன் றுயவே. |
133 |
| |
|
|
| |
அருளே
துமிலே னகலே னுமைவிட்
டிருளே நரகே யெனையெத் தனையாய்
மருளூ ழிசெறுத் துவருத் திடினும்
பொருள்யா துயிர்போக் கிடவல் லுதிரோ. |
134 |
| |
|
|
| |
நல்லார்
மதியு நவைதீர் மறையின்
எல்லா மதியு மிதயக் கரிதீங்
கில்லா மதியு மிகந்திங் கிறுத்தாய்
பொல்லா மதியே புகலென் மதியே. |
135 |
| |
|
|
| |
ஆண்டுண்
டுசுகித் தனையன் புளைபோல்
மாண்டன் றொடொழிந் தனையாங் கொன்மதி
கீண்டித் தலைகீ ழுறமே லெழுவான்
ஈண்டொன் றுரைப்பா யலையெங் குளைநீ. |
136 |