| |
சொன்னாய்
பலதுன் மதிதொல் புவியிற்
பின்னா வருபே ரிடரா ழிநிலை
உன்னா துனுரைத் தலையோ டிவிழுந்
திந்நா ளெரியுண் பலிதென் கதியே. |
137 |
| |
|
|
| |
கள்ளத்
தைவிடுத் துளகட் டுரைகொண்
டுள்ளக் கரியே சிலகா லமுளைத்
தெள்ளப் படுபா வியெனைக் கைவிடுத்
தள்ளற் படுபா தலத்தாழ்த் தினையே. |
138 |
| |
|
|
| |
உலகா
சைபுகட் டியுலா சநெறி
விலகா துமருட் டிமின்னார் வலையிற்
பலகா லும்விழுத் தினையா ரிடநீ
அலகா யுனவஞ் சமறிந் திலனே. |
139 |
| |
|
|
| |
அளவில்
சுகபோ கமளித் தெனுடன்
இளவா யுளெலா நுகர்ந்தின் றிவ்வுலைக்
களவாழ் வுமளித் தனைகை தவமார்
உளமே யெனைவிட் டொழிவா யலையே. |
140
|
| |
|
|
| |
பொன்னா
டுபுகப் பொழுதின் றுலகின்
றின்னே விடியா விருண்மூ டியதால்
என்னோ மனனே யெனையுங் கெடுத்தாய்
அன்னோ வினியென் செயலா வதுவே. |
141 |
| |
|
|
| |
வாணா
ளிறுமுன் வளநா டடையுங் கோணா நெறிகூ டலையே கொடியாய் நாணா ளும்விதைத் தனைநச்
சுவினை காணாய் விழைவுற் றதுகா ரிருளே. |
142 |
| |
|
|
| |
ஞாலத்
தொருநன் றினடைப் பிணமாய்க் காலத் தையிகந் துகடைப் படுமிம் மூலத் தளறூ டுமுயங்
கியவென் சீலத் திறன்செவ் விதுசெவ் விதரோ. |
143
|
| |
|
|
| |
வேறு
என்றிவ் வாறுநொந் திடர்நிரம் பிருட்கடன் முயங்கிப் பொன்று பேறுமற் றேனென
வேக்குறீஇப் புனித மன்றி லங்குலா சருவையு மகப்பலி யமைந்த வென்றி யாபிர காமையும்
விழிக்கெதிர் கண்டான். |
144
|