| |
தக்க
தாயினு மரித்தவர் மீண்டுபோய்த் தரணி
புக்கு ரைத்திடு புதுமைகண் டோம்புவர் புவியின்
மக்கண் மற்றையர் சொற்கொளா தெள்ளுதன் மரபென்
றொக்க லுக்குளம் பரிந்துமன் றாடினா னுரறி.
|
153 |
| |
|
|
| |
துன்று
காரிருட் சூழலான் சொற்றவை
கேட்டு வென்றி கூரா சன்றிரு விளம்பரம் விளம்பும்
நன்று ளாருரைக் குணர்வுறார் நம்புவார் கொல்லோ
பொன்றி யோருரைக் கேகென வருந்தவன் போனான்.
|
154 |
| |
|
|
| |
தீக்கொ
டுஞ்சிறை புகுந்தவர் தீவினைப் பயன்மேல்
ஊக்கி நின்றுதுன் பூட்டுபோ துணர்ந்துளந் திரும்பிக்
கூக்கு ரற்படுப் பினும்பய னென்னைகோல் கொண்ட
ஆக்கை வீழுமுன் னறப்பயன் கூட்டிடா தவமே.
|
155 |
| |
|
|
| |
கூற்று
வைகலுங் கோடியா ஜீவரைக் கொள்ளை
ஆற்றி நுங்குவ தறிந்துமெய் யாக்கத்தைக் கருதார்
தோற்று தீவிட வைம்புல நுகர்ச்சியைத் துய்த்து
மாற்ற ருஞ்சிறை மறிவரீ தென்கொலோ மடமை.
|
156 |
| |
|
|
| |
அருளின்
செல்வமே செல்வத்துட் செல்வமற் றதனைத்
தெருளுஞ் செல்வரே யுன்னத நித்திய செல்வர்
பொருளின் செல்வநீர்த் திரையவா மற்றவை போற்றி
மருளும் பூரியர்க் குறுவது நித்திய வறுமை.
|
157 |
| |
|
|
| |
உலக
செல்வத்து மயங்கிமெய் யூர்த்தநூ னெறியை
விலகு றாதருட் செல்வநா டுறுந்துணை விரகோ
டலகில் பேரரு ளாண்டகை யவனிக்கன் றளித்த
இலகு வான்மதி யிருஞ்சுட ரகந்திகழ்த் திடுவாம்.
|
158 |
| |
|
|
| |
வேறு |
|
| |
|
|
| |
இவ்வண்ண
மிரக்ஷணிய நெறிபுதுக்கி வானுறவோங்
கிதயக் குன்றில்
மெய்வண்ண வற்புதமாந் திருவிளக்கில் விசுவாசச்
சுடரை
யேற்றி
உண்வண்ணஞ் சமைத்திடுவா னுளங்கொண்டு குமரேச
னுலகோ
ருக்குக்
கைவண்ண மருள்வண்ணங் காட்டும்வண்ணஞ்
சொல்வண்ணங்
காட்டுங்
கொல்லோ.
|
159 |