பக்கம் எண் :

82

  திருநோக்காற் றிருவாக்காற் றிருக்கரத்தாற் றிருவருளாற்
      றீண்டிக் கிட்டி
ஒருவரிய பிணிபிறவிக் குருடுசெவி டூமைமுட
      முதிரப் பாடு
வெருவருபேய்க் கோரணிசித் தப்பிரமை திமிர்வாத
      வியாதி யாதி
பருவரலுற் றோர்க்கருளி யிகபரநன் மையையளித்தார்
      பரமன் மைந்தன்.

160
   
  தொண்டரிடு முறைபாட்டி னறிதுயினின் றெழுந்தளோர்
      சுருதிச் சொல்லின்
மண்டலஞ்சூழ் வாரிதியின் கொந்தளிப்புங் கடுஞ்சூறை
      மாரு தத்தின்
உண்டுபடு நிலைப்பிறழ்வு மொருங்கமைய வொல்லையுல
      குவந்த தம்மா
அண்டபகி ரண்டமெலா மமைத்ததிரு வாக்கினுக்கீ
      தரிதாங் கொல்லோ.
161
   
  மன்றலிலா வொருசிறுமி யமங்கலையி னொருசிறுவன்
      வாணான் முற்றிப்
பொன்றியபின் னுடலீமம் புகுமுன்னர்த் தாய்தந்தை
      புரப்பான் வேண்டச்
சென்றிரங்கிப் போனவுயிர் திரும்பியுய வருள்புரிந்த
      செயலை நோக்கி
நின்றவருங் கேட்டவரும் வானாட்டு நெறிபிடித்து
      நிகழ்வ தானார்.
162
   
  மாண்டுபிரே தக்குழியி லொருநாலு வைகலுடன்
      மறிந்து மாவி
ஈண்டொருவி மறுமையிற்புக் கினிதுறைந்து மிறைமகிமை
      யிகங்கண் டேத்தக்
காண்டகைய சுவிசேஷ கதிமார்க்க நலங்கவினக்
      கருணை வாக்கின்
மீண்டுயிர்பெற் றெழுந்துதிரு வடிதொழுதா
                         னொருதொன்டன்
      வெளிப்பட் டைய.
163
   
  ஒக்கலெலா மற்றிவரே யுன்னதநாட் டிளவரச
      னொருங்கு பேயின்
சிக்கறுத்துச் சிறைமீட்டு ஜீவகோ டியைப்புரப்பான்
      ஜெகத்து வந்த