|
மக்களை
மனைவியை மனையைக் காதல்கூர்
ஒக்கலை யுரிமையை யுவக்குந் தேசத்தை
இக்கணம் விடுத்தியா னியம்பு தேயத்திற்
புக்குவாழ்ந் திருத்திநீ போதி யாலெனா.
|
169
|
|
|
|
|
எழுதிய
தோற்சுரு ளெடுத்து நண்பநீ
பழுதிலா மொழியிது பார்த்தி யோவென
உழுவலன் பொடுமன முவந்து நோக்கியீண்
டெழுவல்யான் செல்வழி யாதிங் கென்றனன்.
|
170 |
|
|
|
|
ஆங்குறு
பெருவழிக் கப்பு றத்தொரு
பாங்குறு வாயிலைப் பார்த்தி யல்லையேல்
ஓங்கிருஞ் சுடரொளி யொன்று காண்டிமற்
றீங்கிது குறிக்கொளீஇ யேகற் பாலையால்.
|
171
|
|
|
|
|
எட்டிநீ
நடந்துசென் றிடுக்க வாயிலைக்
கிட்டியுன் கரங்கொடு கிளர்க பாடத்தைத்
தட்டுதி யுனக்கறி தக்க யாவையும்
உட்டெளி வுறவவ ணுரைக்க லாகுமால்.
|
172
|
|
|
|
|
என்னுரை
யணுத்துணை யிகப்பை யாயினும்
மன்னர்கோன் வளநகர் மருவு வாயலை
பன்னுறு கவர்வழி பலவுண் டாங்கவை
உன்னரு நரகபா தலத்தி லுய்க்குமால்.
|
173 |
|
|
|
|
நெறிபிச
காதிடை நின்றி டாதொளிக்
குறிபிடித் தேகெனக் கோதி லன்பொடு
செறியுநல் லாசிகள் செப்பி னானுவந்
தறிவனு மஞ்சலித் தகன்று போயினான்.
|
174 |
|
|
|
|
சுவிசேஷமார்க்கப்
படலம் முற்றிற்று. |
|