|
|
|
|
|
|
|
இடுக்குறு
வாயில்சென் றெய்தி டாமுனம்
தடுக்கருந் தடையயற் சாரு மோவென
நடுக்குறு மாயினு நாயினே னைக்கை
விடுக்குமோ விறையென வெருட்சி நீங்கினான்.
|
1 |
|
|
|
|
கண்ணிலா
னிருவிழி காணப் பெற்றபோல்
மண்ணக விருள்கெட வயங்கு மாச்சுடர்
நண்ணிட மறிந்துள மகிழ்ந்து நாட்டம்வைத்
தெண்ணமற் றின்றியே விரைவி னேகினான்.
|
2 |
|
|
|
|
போவது
கண்டெமைத் துறந்து போதல்நன்
காவதோ திரும்புகென் றாகு லத்துடன்
கூவினர் மனைமகார் குறிக்கொ ளாதவன்
ஜீவனே ஜீவனே யென்னச் சென்றனன்.
|
3 |
|
|
|
|
மூண்டெரி
வளைந்திட முடுகி யிற்புறந்
தாண்டிவீழ்ந் தாருயிர் தப்பி நின்றுபின்
வேண்டுவ முயலுவா ரலது வெண்மையால்
மாண்டழிந் தொழிவரோ மனைம காரொடும்.
|
4
|
|
|
|
|
பற்றியாங்
கொணர்வமென் றிருவர் பன்னிப்போய்
உற்றனர் விரைந்துசென் றுவந்து வேதியன்
கொற்றவன் றிருநகர் குறித்த கொள்கையோ
மற்றுநுங் கருத்தெது வழுத்து வீரென்றான்.
|
5 |
|
|
|
|
இன்றுநீ
மனந்துணிந் தெமைவிட் டேகிடில்
ஒன்றிடும் பெருந்துய ருண்மை யாதலால்
சென்றிடே லெம்முடன் றிரும்பு வாயெனில்
நன்றுனக் காம்பெரு நமர்க்கு நல்லையால்.
|
6
|
|
|
|
|
அரும்பெறன்
மக்களை யாவி யென்றுனை
விரும்பிய மனைவியை வெறுத்திட் டேகுதல்
கரும்புவேம் பாயதோர் கணக்குப் போலுமால்
இரும்பிய னெஞ்சினா யிதுநன் காவதோ.
|
7 |
|
|
|
|
இத்தலத்
துரிமையா வையுமி கந்துசென்
றத்தலத் தழிவில்பே றடைவ னென்றியால்
கைத்தலத் தரும்பொருள் கழிய வீசிடும்
பித்தரோ தனக்கொடி பிறங்க வாழுவார்.
|
8
|