|
மேழிகைங்ப
பிடித்தனன் விடுக்கி லேனினி
நாழியொன் றாயினு நாச தேசத்துத்
தாழிலே னுன்கெடு மதியைச் சார்ந்துநின்
றூழியா யகனுரை கடக்க வொண்ணுமோ.
|
16 |
|
|
|
|
மற்றினி
யுரைப்பதென் வன்னெஞ் சோயிவண்
சொற்றவை மெய்யெனத் துணிதி யேலெற்பின்
பற்றிவான் பரகதிப் பயன்றுய் யின்றெனில்
நிற்றியே னில்லென நிகழ்த்தி னானரோ.
|
17 |
|
|
|
|
கேட்டுவன்
னெஞ்சுனீ தமையுங் கேவல
நாட்டுவாழ் வுவந்தனை நடத்தி நீயெனா
மீட்டுயாம் போதுமென் னெஞ்ச வேதியன்
கூட்டுற வினியொலா தென்று கூறினான்.
|
18 |
|
|
|
|
ஒதுமெய்ச்
சுருதிநூ லுரைக்கு நீதியும்
தீதுநா மியற்றிய திறனு மேல்வரும்
மாதுயர்க் ககன்றுயும் மார்க்க மாவதுங்
காதலாய்த் தெரித்திடு மிவனைக் காய்தியோ.
|
20 |
|
|
|
|
வேதிய
னிங்ஙனம் விதந்த வாய்மையுங்
கோதறு செய்கையுங் குணமு மொத்தலால்
தீதல விவன்வழிச் சேற லென்றியான்
போதர விசைந்துளம் பொருந்தி னேனெனறான்.
|
21 |
|
|
|
|
உற்றமென்
னெஞ்சகை யுறவ ருந்திட
வெற்றுமிக் குத்துதல் விழுமி தன்றுகாண்
சுற்றமுங் காதலுந் துனியின் மூழ்கநீ
பெற்றிடு பயனொரு பெற்றித் தாகுமோ.
|
22 |
|
|
|
|
என்னதுன்
மதியுனக் கியைந்த தீங்கிவன்
உன்னரும் பைத்திய முனக்கு நேர்ந்ததோ
சொன்னவத் திருநகர் துன்னி னாரெவர்
பன்னுசொப் பனப்பொருள் பலிக்கு மேகொலாம்.
|
23
|
|
|
|
|
ஓடிட
மருந்தயின் றுறங்கி வீழ்தல்போல்
நாடியிங் கிவற்றர நவின்று வந்தினே
கோடிய மனத்தின னோடு கூடிநீ
கேடுறத் துணிந்தனை கிளக்க லாவதென்.
|
24 |