|
மன்வழி
மரபுளார் வகுத்துக் காட்டிய
முன்வழி யிகப்பது முறைமை யன்றினி
உன்வழிச் சேறியேற் சேறி யொள்ளிய
என்வழி யேகுவன் யானென் றேகினான்.
|
25 |
|
|
|
|
ஏகுவன்
னெஞ்சனுக் கிரங்கி யெம்பிநீ
போகலை யெம்முடன் பொருந்து வாயெனிற்
சாகலை நித்திய சாம்பி ராஜ்ஜிய
போகபூ மியினலம் பொருந்து வாயென்றான்.
|
26
|
|
|
|
|
பன்முறை
வேதியன் பரிந்து கூவவும்
நன்முறை யறிகிலா னாச தேசத்துச்
சென்முறை துணிந்தனன் ஜீவன் மல்கிய
சொன்முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார்.
|
27 |
|
|
|
|
கல்லென
வுரத்தவன் னெஞ்சன் கங்குலை
எல்லெனக் கூறியாங் கீறில் துன்பத்தைச்
சொல்லருஞ் சுகமெனத் துணிந்து போதல்கண்
டொல்லைமென் னெஞ்சனீ துசாவு வானரோ.
|
28
|
|
|
|
|
உத்தம
தோழநீ யுவந்து பேசிய
முத்திமா நகர்க்கொரு முதல்வ னாக்கிய
அத்தகு பாதைநீ யறிதி யோவஃ
தெத்திசை யேகுது மெழுக் வென்றனன்.
|
29 |
|
|
|
|
துணைவநோக்
காயிடைத் தோன்று கின்றவோர்
இணையறு சுடரரு கிடுக்க வாயிலை
அணையின்மற் றவையவ ணறிய லாகுமத்
திணிசுடர் குறிக்கொடு செல்ல வேண்டுமால்.
|
30 |
|
|
|
|
பொருவருந்
திருவருட் புணர்ப்பி னாலியாம்
இருவரு முடன்செல விசைந்து நின்றனம்
வெருவர லின்றிமேல் விரைந்து செல்வதே
கருமமிப் பெருவெளி கடத்து மென்றனன்.
|
31 |
|
|
|
|
வஞ்சமில்
வேதியன் வகுத்தல் கேட்டுமென்
நெஞ்சனு மொருப்படீஇ நெறியைப் பற்றினான்
எஞ்சுறா திருவரும் விரைவி னேகினார்
பஞ்சர நீத்தபைங் கிளியின் பான்மையார்.
|
32 |
|
|
|
|
யாத்திராரம்பப்
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இன்ன
தன்மைய ரிருவரும் பெருவெளி யிசைந்து
மன்னிவ் வோரடித் தடத்தைவிட் டயற்புறம் வழுவில்
துன்னு மின்னலென் றஞ்சின ராய்ச்சுவி சேஷன்
சொன்ன சொற்குறி கடைப்பிடித் தேகினர் துணிந்து.
|
1
|
|
|
|
|
ஆய
காலைமென் னெஞ்சனிங் காரையுங் காணோம்
தூய வேதிய நாஞ்செலத் துணிந்தகா ரியமென்
போயி னிக்குடி புகுமிடம் யாதவண் புகுவோர்க்
கேயு நற்சுகா னந்தமென் னியம்புதி யென்றான்.
|
2 |
|
|
|
|
நன்று
நின்வினா வுத்தரஞ் சுருதியே நவிலும்
அன்றி யெம்மனோர் வாக்கினுக் கதீதமா மையம்
ஒன்றி டாதுகேட் டுய்த்துணர்ந் திடுகவீ துண்மை
என்று புத்தகச் சுருள்படித் திவையிலை யியம்பும்.
|
3 |
|
|
|
|
ஜீவ
ரக்ஷையை நாடிநாஞ் சென்றுசே ரிடந்தான்
ஓவ வில்பர, லோகராஜ் ஜியமஃ துற்றால்
மேவ ரும்பர மானந்த சுகநிலை மேவும்
தாவி னித்திய ஜீவனைப் பெறுவதுஞ் சரதம்.
|
4 |
|
|
|
|
துன்ப
வாழியின் மூழ்கிவெந் துயரெலாந் துடைத்து
மன்ப தைக்கழி யாப்பதம் வழங்கிய வரதன்
அன்பு மல்கிய ஜீவமா நதித்துறை யாடிப்
பொன்பொ லிந்தசெஞ் சேவடிக் கற்பகம் புகுவாம்.
|
5 |
|
|
|
|
விழுத்த
குங்கதி ரொளிதிவள் வெண்டுகில் புனைந்து
வழுத்து தற்கரு மகிமையொண் மௌலியைச் சூடிப்
பழுத்த பத்தியிற் பரவச ராகிநம் பரனைத்
தொழத்த குஞ்சுர கணங்களோ டடியிணை தொழுவாம்.
|
6 |
|
|
|
|
புனித
ராகிய புங்கவர் புரையில்புத் தேளிர்
நனிதி ருப்பணி விடைபுரி தூதர்நம் பனுக்காய்த்
துனிசு மந்துயிர் விடுத்துவான் கதிபெற்ற சூரர்
இனிதி னேத்துபல் லாண்டிசை செவிமடுத் திடுவாம்.
|
7 |
|
|
|
|
ஜீவ
தாருவின் செழுங்கனித் தீஞ்சுவை யமிர்த
தேவ போனக மாரவுண் டானந்தந் தேக்கி
ஓவி லன்பொடு துதிபகர்ந் துவந்தினி திருப்பாம்
பாவ சங்கடம் யாவையு நம்முழை படரா.
|
8 |