|
மன்ன
னேவலில் வருபிர யாணிகள் வழுவி
இன்ன லெய்திடா திராஜபா தையினிரு மருங்கும்
முன்ன ராக்கிய பித்தியுண் டிவ்வகை மோசந்
துன்னு றாதுசெந் நெறிக்கடை வாயிலைத் துன்னில்.
|
49 |
|
|
|
|
இன்ன
வாறெனக் கிதமுற வெழின்முக மலர்ந்து
நன்னர் வாசக நவிற்றிய சஹாயற்கு நன்றி
பன்னி யஞ்சலி வரன்முறை பணிவுடன்னல்கிச்
சொன்ன வேதிய னிலையினை நாடுவான் றுணிந்தேன்.
|
50 |
|
|
|
|
அவநம்பிக்கைப்
படலம் முற்றிற்று
__________________________________
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஓதக்கடல்
சூழுல கத்தையு வர்த்து நின்ற
மேதக்கநீர் மைவிறல் வேதியன் வேத நுண்ணூற்
போதக்கதி கொண்டொளி வாயில்பொ ருந்த நோக்கி
நோக்கசும் மையொடு போயினன் சிந்தை நொந்தே.
|
1
|
|
|
|
|
அவ்வேலையிச்
சாபுர மென்னவ டுத்தி ருக்கும்
வெவ்வூரிடை நின்றுலௌ கீகன்வி ரைந்து கிட்டி
ஒவ்வாதக டுஞ்சுமை தாங்கியை யொப்ப நைவாய்
எவ்வூர்செல வெண்ணுதி நண்பவி யம்பு கென்றான்.
|
2 |
|
|
|
|
மோகாதுர
னாகிய றத்துறை முற்று நீத்த
ஆகாமிய னானென்ன ருஞ்சுமை யாற்று கில்லேன்
வாகாயசெ ழுஞ்சுவி சேடன்மெய் வாக்கை நம்பி
ஏகாதிப னின்னருள் பெற்றிட வேகு கின்றேன்.
|
3 |
|
|
|
|
முன்னானதி
ருக்கடை வாயிலை முற்றி லைய
பின்னாகவ றிந்திடு வாய்வரு பெற்றி யாவும்
என்னாவுரை தந்தெனை யேவின னென்றிவ் வெல்லாஞ்
சொன்னானது கேட்டுலௌ கீகனுஞ் சொல்ல லுற்றான்.
|
4
|
|
|
|
|
பொருளுற்றறி
யாதபுன் மாக்கள்பு கன்ற சொல்லான்
மருளுற்றுரி மைத்திறன் யாவும்வ ரைந்து வீசி
இருளுற்றிடர் துற்றிய பாழ்நெறி யேகி னாயென்
றருளுற்றநந் நாட்டவர் பேசவ றிந்த துண்டே.
|
5 |