| |
நற்றாபத
னெம்முயிர் நாயகன் நல்ல நீதி
பற்றாதொரு பத்துவி தித்துணை பற்றி முத்தி
உற்றாருயிர் பெற்றுல வாநல முண்ணு மென்றல்
கற்றூண்டழு விக்கட னீந்தல்க டுக்கு மாதோ.
|
22 |
| |
|
|
| |
விண்ணாடடை
யுந்நெறி யோடுமி ளிர்ந்து தோன்றிக்
கண்ணாடுக வின்சுட ருங்கரு தாது போக்கி
மண்ணாடுத டத்தொரு சார்மலைச் சார லூடு
புண்ணாடிய நெஞ்சொடு வேதியன் போயி னானே.
|
23 |
| |
|
|
| |
வேறு |
|
| |
|
|
| |
வாழிய
வானுற நிமிர்ந்த மாண்பது
பாழியங் குவடொரு பத்து மிக்கது
தாழிரும் பொறைநனி சமழ்த்த லாற்றிரை
ஆழிசூழ் புவிமுது காற்றொ ணாதது.
|
24 |
| |
|
|
| |
கருமுகிற்
கணம்புடை கஞலுங் காட்சிய
துருமின முழக்கமிக் குரறுங் கோட்பது
நிருமலன் றிருக்கர நீதிப் பட்டயம்
பொருமொளி மின்குழாம் பொலியும் பொற்பது.
|
25 |
| |
|
|
| |
துப்புறழ்
முடித்தலை கவிந்த தோற்றத்த
தெப்புறத் தினுநனி யிருந்தை யாரழற்
குப்பையை யிறைப்பது குலவு நீணெறி
தப்பிடி லதோகதித் தலத்தி லுய்ப்பது.
|
26 |
| |
|
|
| |
தன்னுறு
வழிப்புகூஉத் தவறி னோர்தமை
முன்னுறு மிருட்சிறைப் படுக்கு மொய்ம்பது
மன்னுறு வழிகடைப் பிடித்த மாந்தர்க்கும்
பன்னுறு திகில்பல விளைக்கும் பண்பது.
|
27 |
| |
|
|
| |
வசையற
விளங்கிய மாட்சித் தாயினும்
பசையறப் புலர்ந்தது பரவை மாநிலத்
திசையுற விவ்வழி யேகு வோர்தலை
மிசையுறக் கவிழ்ந்திடுங் குடுமி மேலது.
|
28 |
| |
|
|
| |
துன்னரு
நெறியது துணுக்க முள்ளது
பன்னருந் தரத்தது பவித்தி ரத்தது
மன்னொரு சுதனலான் மநுக்கள் யாரையுந்
தன்னடிப் படுக்குறுந் தகைமை சான்றது.
|
29 |