பக்கம் எண் :

சீறாப்புராணம்

1701


இரண்டாம் பாகம்
 

சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் அந்த வார்த்தைக ளைந்திற்கும் ஐந்து தரம் ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் மீது சத்தியஞ் செய்தார்கள். உடனே அந்த லுமாமென்பவர்கள் ஐயாவே! நீங்கள் சொன்னது சத்தியந்தானென்று சொல்லி ஈமானிலாய் இதயத்தின் கண்ணுள்ள அந்தகாரம் நிறைந்த குபிர்மார்க்கத்தை யொழித்து “லாயிலாஹ இல்லல்லாகு முகம்மதுர் றசூலுல்லாஹி” யென்னுங் கலிமாவையுஞ் சொல்லிப் புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்மார்க்கத்தில் நின்றார்கள்.

 

4684. அன்னவர்தா முகம்மதைப்பார்த் தையாவென்

         செய்தியைக்கே ளியானா ரென்னில்

     முன்னுமக்கு முலைகொடுத்த அலிமாவின்

         கிளையிலுள்ள முல்லை சேரு

     மன்னுநெறி முறைதவாற பனீசகுது

         கூட்டத்தார் பலருங் கூடி

     யென்னையும துளமகிமை யறிந்துவர

         விடுத்தனரியா னிவண்வந் தேனால்.

7

      (இ-ள்) அவ்வாறு நின்ற அந்த லுமாம் றலியல்லாகு அன்கு அவர்கள் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களைப் பார்த்து ஐயாவே! நீங்கள் எனது சமாச்சாரத்தைக் கேளுங்கள். யான் யாரென்னில் ஆதியில் உங்களுக்குப் பால்தந்த ஹலிமாவென்பவளது குடும்பத்திலுள்ள வெற்றியைப் பொருந்திய சன்மார்க்கத்தினது ஒழுங்கில் நின்றும் பிசகாத பனீசகுது கூட்டத்தார்கள் பலருமொன்று சேர்ந்து என்னை உங்களது இதயத்தின் மகத்துவத்தைத் தெரிந்து வரும் வண்ணம் அனுப்பினார்கள். யான் இங்கே வந்தேன்.

 

4685. உண்மைநபி யெனவறிந்து கலிமாவோ

         தித்தொழுகை யுறுதி கொண்டு

     தண்மையுறு நெறிமுறைமை நன்மைதரு

         தூயதீன் சமய முற்றேன்

     றிண்மைபெறும் பனீசகுது கூட்டத்தா

         ரிடத்தினிலியான் சென்று மிக்க

     வண்மைபெற வவரையெல்லா மீமானில்

         வழிப்படுத்தி வருவிப் பேனே.

8

     (இ-ள்) சத்தியத்தைக் கொண்ட நபியென்று தெரிந்து கலிமாச் சொல்லித் தொழுகையினது உறுதியை யேற்று இன்பத்தைப்