|
முதற்பாகம்
செயல்களைப் பார்த்து
வலிமையுடன் பதிற் சொல்லுவாயாக! அந்தச் சொல்லின்படி நாங்கள் நடப்பது உண்மையென்று
சொன்னார்கள்.
1084.
தீட்டுதிறற்
புகழமுசா வுரைத்தமொழி
யமுதமழை செவியிற்
பாய்ந்து
நாட்டமுறு மனத்தடத்தை
நிரப்பிடச்செம்
முகமலர்ந்து
நவில்கி லாது
கூட்டுமுத லவன்விதிப்பு
மகள்கனவு
மிவைநிகழ்ந்த
குறிப்பு நோக்கிப்
பூட்டுமணிக் கதிர்வலய
நெகிழவடிக்
கடிபுயங்கள்
பூரித் தானே.
51
(இ-ள்) அப்போது குவைலிதென்பவன் தீட்டாநிற்கும்
வலிமைகொண்ட கீர்த்தியையுடைய ஹம்சா அவர்கள் சொல்லிய வார்த்தைகளாகிய அமுதமழையானது தனது
காதுகளிற்சாடி விருப்பமுற்ற மனமாகிய தடாகத்தை நிறைத்திடவே, சிவந்த முகமானது மலரப்பெற்று
யாதொன்றும் பேசாது நன்மையான சகல விஷயங்களையும் சேர்த்து வையாநின்ற முதன்மையனான ஹக்கு
சுபுகானகுவத்த ஆலாவின் நியமிப்பையும் தன்மகளாகிய கதீஜாநாயகியவர்களின் சொப்பனத்தையும் ஹம்சா
அவர்களால் நடைபெற்ற குறிப்பாகிய இவைகளையும் பார்த்துக் கைகளிற்பூட்டிய இரத்தின வர்க்கங்களினது
பிரகாசத்தையுடைய கடகங்கள் நெகிழும் வண்ணம் அடிக்கடி இருபுயங்களும் விம்முதலுற்றான்.
1085.
வடிவாலுங் குணத்தாலுங்
குலத்தாலும்
முகம்மதுநேர்
மற்றோ ரில்லைப்
படியாளு முதியாரி
லியாவரவர்
மணம்பொருந்தப்
பகர்ந்தி டாதார்
பிடியாரு மென்னடைக்கொம்
பினைக்கதீசா
வெனத்தமியேன்
பெற்ற பேறைக்
கடியாரு மலர்சூட்டி
நும்மிடத்திற்
றருகமனங்
கருதிற் றென்றே.
52
(இ-ள்) அவ்வாறு
விம்முதலுற்று அழகினாலும் குணத்தினாலும் குலத்தினாலும் முகம்மதென்பவருக்கு வேறேயொருவரும் ஒப்பில்லர்.
இந்தப் பூலோகத்தை ஆட்சி செய்யும் முதியவர்களில் அந்த முஹம்மதென்பவரின் விவாகத்திற் கிசைந்து
சொல்லாதவர்கள் யாவர்? ஆதலால் அவருக்குப் பெண் யானை போலும் பொருந்தா நிற்கும் மெல்லிய
நடையினையுடைய பூங்கொம்பானவரைக் கதீஜாவென்று
|