பக்கம் எண் :

100 வலம்புரி ஜான்


O

 

சலவை செய்த

பளிங்காய் இருந்தும் ...

இன்னமும் வெளுக்க -

இடம் உண்டென்று

கருதியே முகம்மது

கண்ணீர் வடிப்பார் !

 

O

 

மணல் மைதானத்தில்

காகிதக் கப்பலைச்

செலுத்துவர் -

மற்ற இளைஞர்கள் ...

முகம்மதுவோ -

மனிதன் படைக்கப்பட்டது

மாபெரும் பணிக்கு;

விளையாடித் திரிந்து

வீழ்வதற்கல்ல என்பார்கள் !

 

O

 

காரணம் ...

மற்றவர்களுக்கு

மனிதர்கள்

வெட்டி எறிந்த நகங்கள் !

முகம்மது நபிக்கோ ...

மனிதர்கள்

பிறை நிலாக்கள் !