பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்101


O

 

போகமாட்டேன் என்று

பொழுது -

அடம்பிடித்து அழுததைப்போல்

போகவில்லை

பொழுது என்பர்

‘பொறி’ இல்லா இளைஞர் சிலர் ...

அன்றைய அரேபியாவின்

இன்றைய வார்ப்புகள் !

 

O

 

முகம்மதுவோ ...

பொழுது போகவில்லை

என்று எண்ணாமல் -

பொழுது போதவில்லை

என்பார்.

 

காலக்குரல்

 

O

 

பொம்மையாய் விழுந்த

மனிதக் குழந்தை

பொம்மையின் காலில்

பொழுதும் விழுந்தது.

 

O

 

பொம்மை உணர்த்தும்

பெரியோன் இருக்க -

பொம்மையே பெரியோன்

என்றது உலகம் !