O படைத்தற்கெல்லாம் குழந்தை மனிதன் படியாய் விழுந்தான். பாவம் மனிதன் ! O சிலையைச் செய்தான் ... சிலையின் காலில் இவனே கிடந்தான் ! O பணத்தை வடித்தான்... இவனுக்கே அது வினையாய் விடிந்தது ! O எல்லோருக்கும் விலை வைத்தான் ... பிறகு - மலிவு விலையில் மனிதன் கிடைத்தான் ! O இயந்திரம் கண்டான். இறுதியில் இந்நாள் இயந்திரத்தாலே மனிதன் இவனே இடம் பெயர்கின்றான் ! |
|
|