பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்103


O

 

ஆட்சியை அமைத்தான்;

அடுத்த தேர்தல்

வருகிற வரைக்கும்

ஆட்சியாளரின்

அடிமையாய் ஆனான் !

 

O

 

படைத்ததற்கெல்லாம்

அடிமையாய் ஆனான்

பாவம் மனிதன் !

 

O

 

சேர்ந்தவரெல்லாம்

சிலைகளை வணங்கினர் ;

முகம்மதுவோ

முகத்தைத் திருப்பினார் !

 

O

 

சிலைகளின் முன்னால்

உணவினைப் படைத்தனர்.

அவைகளைச்

சிலைகள்

செரித்து விட்டிருந்தால் ...

மறுநாள் உணவினை

படைப்பவர் வருவரா ?

 

O

 

இப்படிப் படைத்த

உணவினை உண்டனர் ;