பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்105


செவிவயலில் சிந்துகிற ...

உலகக்கல்வி பெறாத அவரை

‘உம்மீ’ நபிகள்

என்றனர் உயர்ந்தோர் !

 

O

 

பெருமானார்

உண்மைக்கு மாறாக

உரைத்ததில்லை.

காரணம் ...

முகம்மது -

இயற்கையாய் இருந்தார் !

 

O

 

மூக்குத்திகளை விட

மூக்குகளுக்கே - அவர்

முக்கியத்துவம் தந்தார் !

புறம் கூறல் அவருக்குப்

பழக்கம் இல்லை.

 

O

 

புறம் கூறுகிறவர்கள்

சத்தமின்றிக் கடிக்கும்

சாரைப்பாம்புகள் !

 

O

 

சூடிக் கொடுத்த ஆண்டாள் நாச்சி

சுட்டிச் சொல்லுவாள் ...

புறங்கூறுதலைத்