பக்கம் எண் :

106 வலம்புரி ஜான்


‘தீக்குறள்’ என்று

செய்யாதன செய்யோம் என்றாள் !

 

O

 

பஞ்சமா பாதகங்கள்

இந்த -

வாக்கியத்தில்

வசமான பின்னர்

தீக்குறளைச் சென்றோதோம்

என்றாள் !

ஆறாவது பாதகம் இது

பஞ்சமா பாதகத்தில்

பதுங்காதது !

 

O

 

முகம்மதுக்கும் எப்போதோ

கோபம் வரும் ; ஆனால்

சொற்களுக்குப்

பற்கள் முளைத்திருக்காது !

 

O

 

அவருக்கு

இனிப்பே ...

உதடுகளாகிப்போனது !

இயல்பே பணிவாய் ஆனது !

 

O

 

கோபுரஉச்சியோ ...

குடிசை முற்றமோ ...

எல்லா இடங்களிலும் இடம்பிடிக்கும்