பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்107


காற்றைப்போல் ...

முகம்மது கதவைத் தட்டினார் !

 

O

 

அழைக்காமல் போவதா

என்கிறார்கள் ...

காற்று -

பூதங்களில் ஒன்று.

அது என்ன அழைப்பை எதிர்பார்த்தா

நமது -

நாசித்துவாரங்களில்

நர்த்தனம் நடத்துகிறது !

 

அண்ணல் அல் அமீன் ஆனார் !

 

O

 

கடைக்குப் போகிறேன்

என்ன வேண்டும்

என்றே கேட்பார்;

வாங்கி வந்து

வழங்குவதும் அன்றி

கணக்கை நீட்டுவார்

கச்சிதமாக ...

 

O

 

பாதையைத் தொலைத்தோர்

பல பேர்களுக்கும்

மேன்மை முகம்மது

மேற்குத் திக்கு.