O கம்பவிளக்கு வெளிச்சக்கோலால் பூமியைப் பெருக்கக் குனிவது போல ... மறையவர் முகம்மது நடக்கும் போது பூமியைப் பார்த்தே கண்களை விதைப்பார் ! O வெளிச்சப் புள்ளியாய் விரைகிற இவரை உதட்டால் ஊரார் ‘அல் அமீன்’ என்பர். ‘அல் அமீன்’ என்றால் நம்பிக்கைக்குரியவர் என்றே பொருள்படும் ! O உண்கிறேன் ; குடிக்கிறேன் ; சொல்லில் சுளுக்கு இல்லவே இல்லை ; சுவாசிக்கிறேன் - சொல்லல் சரியா ? O நாசிக்கம்பத்தில் காற்றுக் கொடியை ஏற்றி இறக்குவது நாமா ? |