பக்கம் எண் :

110 வலம்புரி ஜான்


O

 

அவ்வப்போது

கைதாகிற காற்று

அவ்வப்போது

விடுதலை ஆகிறது !

 

O

 

இந்த -

காற்றைச் சுவாசிப்பதால்

மனிதர்கள் வாழ்வதில்லை;

நம்பிக்கைகளைச் சுவாசிப்பதால் தான்

வாழ்கிறார்கள் !

 

O

 

நம்பிக்கை -

சொர்க்க உலகத்தின்

சுனை நீர் ஊற்று ...

பிரளயம் பிறந்தபோதெல்லாம்

வற்றிவிட்டது நீர் என்று

செய்தி வாசித்த வானவில் !

 

O

 

காற்றில் ஆடும் தீபங்கள்

அணைந்துவிடாமல் ...

கைத்தலமாகிக் காப்பாற்றுகிற

சதைத் தாமரை !

 

O

 

நம்பிக்கை இல்லாத

இல்லங்களில் ...