பக்கம் எண் :

112 வலம்புரி ஜான்


களவு செய்தவர்களிடம் ...

கண்களையாவது தந்துவிடுமாறு

கதறி வேண்டுகிறார்.

 

O

 

நம்பிக்கை சிதைந்துவருகிற

நாட்களில் ...

நாயகத்தை நினைக்கிறோம்

‘அல் அமீன்’ ‘அல் அமீன்’

அவர் -

‘அல் அமீன்’ மாத்திரம்

அல்லர்

‘அஸ்ஸாதிக்’ (உண்மை உரைப்பவர்)

 

O

 

அந்த நாள் மக்காவில்

கண்ணுக்குள் வைத்துக்

காப்பாற்ற இயலாத

பொருளுக்கெல்லாம்

பாதுகாப்பு பெட்டகம்

நாயகம் அவர்களே !

 

O

 

மூத்தோர் முகம்மது

முறைப்படி எங்கும்

படித்திடவில்லை.

பல்கலைக் கழகம் எங்காவது

பாடம் பயில பள்ளிக்கு வருமா?