பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்113


O

 

பட்டாணிக் கடலையைப்

பார்த்துப் பார்த்து

உலக உருண்டை எங்காவது

உடுத்திக் கொள்ளுமா?

 

O

 

நேரம் வந்தால்

வேளை வந்தால்

முட்டைத் தோட்டைத் தனது

குட்டை அலகால்

தட்டி எறிந்துவிட்டு

பிரபஞ்சம் என்கிற

கடலை உருண்டையைக்

காலால் உதைக்கிறதே

கோழிக்குஞ்சு -

 

O

 

தோட்டுக்குள் -

சுட்டிக்காட்டுவதற்கு

சுவர்க்கடிகாரம் இல்லை ...

சொல்லிக் கொடுக்க

ஆசிரியப் பெருமக்கள்

அறவே இல்லை ...

 

O

 

முட்டைக்குள்ளும்

இறைவனின் நாட்டம்

முகாம் இட்டிருக்கும் !