பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்123


வகிடு எடுக்கிற வேலையை

மற்றவர்களுக்கு

விட்டு விட்டார்

தாம் தனித்து நின்றார் !

 

O

 

அரபு மண்ணில்

அடிக்கடி நடக்கும்

வீரவிளையாட்டுக்களால் ...

வெள்ள மழையில்

வேரழுகிச் சாகும்

கீரைப் பாத்திகள் போல் ...

கிழிந்தன குடும்பங்கள் !

 

O

 

பார்த்தனர் தலைவர்கள் ;

பதைத்தனர் சில பேர்.

பட்டுப்புடவை முழுவதுமாக

சரிந்திருந்தாலும் ...

சரிகை உறுத்தலை

உணராத உடல்களே

இங்கு - அதிகம் !

 

O

 

பரிசோதிக்கப்பட வேண்டிய

பழந்தமிழ் உடல்கள் இங்கே

அதிகம் என்பேன் ...