பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்125


கஃபாவில் கண்ணியர் !  

 

O

 

ஒழுங்காய் இயங்கும்

உடலின் இதயமாய் ...

 

O

 

நங்கூரம் இட்டும்

நகர்ந்து திரிகிற

பொறிகளின் துறைமுகமான

பொலிந்த முகத்தில்

சித்தர்கள் சுட்டும்

சுழிமுனையாய் ...

 

O

 

உப்பு நீர்ப்பூக்களில்

ஒளிச்சேர்க்கை நடத்தும்

இமைகளாய் ...

 

O

 

வெளிச்ச மதகுகளின்

வீழ்ச்சியான பார்வையாய் ...

 

O

 

கழுவாத கலர்ப்படங்களை

கோடிக்கண்களில்

புதைத்து வைத்திருக்கும்

பாவையாய் ...