பக்கம் எண் :

128 வலம்புரி ஜான்


வாயில் வழியாய்

முதன் முதலாக

வருபவர் எவரோ

அவரின் தீர்ப்பை

அனைவரும் ஏற்போம்

என்றார் அவரும்.

 

O

 

எல்லாத் தலைகளும்

ஒரு நொடிப் பொழுதில்

தாழப் பறந்தன !

 

O

 

அல்லாஹ்வின் அற்புதம்

மறுநாள் ஆங்கே

விதையாய் விழுந்தது !

 

O

 

காலை விடிந்தது.

கதிரும் எழுந்தது.

முகம்மது முஸ்தபர்

முகிலைக் கிழித்தார் ;

முறுவல் பூத்தார் !

 

O

 

குறைஷிகள் முகத்தில்

சங்கு சக்கரம்

சதுரம் அடித்தது !