பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்131


வள்ளல் நடத்திய வாணிபம் !

O

பெரியப்பா வழியில்

பிள்ளை முகம்மதும்

வாணிபம் தொடங்கினார்.

உண்மை ; நம்பிக்கை

கொடுத்த வாக்கை

கோடாது போற்றல்

போன்ற பண்புகள்

பொதிந்து கிடந்தன

நாயகத்திடத்தில் !

 

O

 

அம்சா என்ற

வாணிபர் ஒருவர்

நாயகத்திடமிருந்து

நல்ல சரக்குகள்

வாங்கிடவென்று

குறித்த பொழுதினில்

வருவதாய்ச் சொல்லி

வழிபார்த்துப் போனார் !

 

O

 

சொன்ன சொல்லை

அம்சா என்பவர்

மூன்று நாட்களாய்

முழுவதும் மறந்தார்

மூன்றாம் தினத்தில்