அம்சா பதறினார் உடனே ஓடினார் ! O விழிப்புருவங்களோ வில்லாய் வளைந்தன ... மூன்று நாட்களாய் அதே இடத்தில் முகம்மது என்கிற தேயாத நிலவு தேங்கிக் கிடந்தது ! O வாக்கை நிறைவேற்றவில்லையென வருந்தவே இல்லை நபிகள் பெருமான். மண்ணில் புதைந்த விதையைப் போல ... மௌனமானார் ! மூன்று நாட்களாய் காத்துக் கிடந்தேன் என்று மாத்திரம் முன்னவர் முகம்மது சீதளச் சிரிப்பில் சொற்களைக் குழைத்தார் ! O அந்த நாளில் மக்கா வாசிகள் தேடிய பணத்தைப் புதைத்து விட்டு இடத்தைத் தேடி இளைப்பது இல்லை ! |