தென்றலுக்கு வந்த தினவு ! O அந்த நாளில் மக்கமா நகரில் குறைஷி வம்சத்தில் கீர்த்திமிக்க குடும்பம் ஒன்றில் கதீஜா என்ற முத்து ஒன்று கருத்தினைக் கவர்ந்தது ! O கதீஜா - கைகால் முளைத்த கனவு ! மண்ணில் தெரிந்த மதுர நிலவு ! O சதையில் வடித்த சரித்திரக் கவிதையாய் ... இறைவனை நாடிய இனிய பறவையாய் ... கதீஜா இருந்தார் ! O தங்க நிலவு அது தாஹிரா என்றும் அழைக்கப்பட்டது ! |