பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்157


O

 

சொந்தப் பிள்ளைகளுக்கு

நாயகம் -

நினைவில் இடம் தந்தார்

ஜைத்திற்கோ

இதயத்தில் இருக்கை போட்டார்!

 

O

 

ஜைதைப் பார்த்தவர் எல்லாம்

பெருமானாரின் பிள்ளை என்றே

பெருமைப்பட்டனர்!

 

O

 

நாயகத்தின் நற்குணங்கள்

ஜைத் நெஞ்சில்

சரிவர

வேர்பிடித்து விட்டதால்

அவர் -

வேறெங்கும் போகவில்லை!

 

O

 

தந்தையார் வந்து அழைத்தார்

நாயகத்தை விட்டு

நகரேன் என்றார்.

 

O

 

மழை நீரில் நனைந்த

மண்சுவரில் -

அடித்ததும் இறங்கும்

ஆணியாய் அல்லாமல் ...