கருங்கல் சுவரில் துளையிட்டு கவனமுடன் இடம் பிடித்த கடையாணிபோல் நாயகம் நெஞ்சில் ஸையத் இடம்பிடித்தார்! O விடுவிக்கப்பட்ட ஜைதுக்கு ... விலங்கொன்று பூட்டினார் முகம்மது அவர்கள் ! இது - பூவிலங்கு! பொன்னில் இழைந்த புது வகை விலங்கு! O தமது - அத்தை மகளான ஜைனப் என்பவரை ஜையத்திற்கு நாயகமே முன்னின்று நறுமணம் முடித்தார்கள். O அடிமையை விடுவித்தார் அன்புப் பிள்ளையென்றார் அத்தை மகளைக் கொடுத்தார் அவருக்கு நான் சமம் என்றார் அண்ணலின் உதாரணம் அற்புத சாதனம் ! |