O நாணல்களின் மத்தியில் நாதஸ்வரத்தைப் போல ... நிமிர்ந்து நின்றார் அண்ணல் அவர்கள் ! O சடங்குகள் எங்காவது சமயம் ஆகுமா ? ஆகும் ! O உமி எப்போதாவது நெல் ஆனால் ... உரல் எப்போதாவது உணவாய் ஆனால்... O அந்த நாள் அரேபியர்களின் அர்த்தமற்ற சடங்குகளை ... அண்ணலார் அறவே வெறுத்தார்கள். O ஒப்பனை ஒரு நாளும் முகம் ஆகாது என்பதிலும் ... உள் நாக்கு ஒருபோதும் சுவை அறியாது என்பதிலும் ... முகம்மது அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது ! |