பக்கம் எண் :

162 வலம்புரி ஜான்


O

 

படைக்கப்பட்டவைகளை

வசிய மை பூசாமலேயே

வசப்படுத்தி விடுகிற

ஆற்றல் மனிதனுக்கு உண்டு.

இருந்தும் ...

படைக்கப்பட்டவைகளின்

பாத வளையங்களுக்குள்ளே

பதுங்கி இருப்பதிலேதான்

பரம சுகம் அவனுக்கு !

 

O

 

‘படைப்பில்’ மனிதன் சிகரம்

அடிக்கடி சலவைக்குப் போட வேண்டிய

அவசியத்திற்கு ஆளாவதே

இந்த வாக்கியம் தான் ...

 

O

 

படைப்பில் மனிதன் சிகரம் -

என்பதற்கான

அடையாளங்களை

அவ்வப்பொழுது அவன்

தொலைத்து விடுகிறான் ...

என்றாலும் மனிதனே சிகரம்

 

O

 

மனிதனே ...

இதைச் சொல்லுவது தான்

மகிழ்ச்சி தருவதாக இல்லை!

இறைவனது படைப்பில்

இழிந்தது இல்லை!