O படைக்கப்பட்டவைகளைப் பரமன் என்று பாவம் மனிதன் பாவித்து வருவதை நாயகம் கண்டு நடுங்கிப் போனார் ; உள்ளம் கிழிந்தது உணர்வுகள் கலங்கின. மூக்கு மாத்திரமே முற்போக்கு ! O உலகில் பாதி பெண்கள் பூக்கள் என்பர் ; நதிகள் என்பர் ; நாநிலம் எல்லாம் பெண்ணே என்பர் ; ஆணொரு பாதி ; பெண்ணொரு பாதி ; இனிப்பு வார்த்தைகளால் காதுகளை நிரப்பிவிட்டால் நீரிழிவு ஒன்றுதான் நிரந்தரம் ! O வார்த்தைப் பந்தலில் வாடிடும் கொடிகள் ! இன்றே இது நிலை என்றால், அன்றைய நிலையை அறியவா வேண்டும்? |