நபிகளானார் நாயகம் ! O கத்திக் கொண்டே இருந்த கடலின் உதடு அன்று கறுத்துப் போனது. O எட்டிப் பார்க்க எண்ணிய பவளப் பாறைகள் கடலின் தொண்டைக்குள் பரமபதம் விளையாடின. O காலம் தாண்டிய கர்ப்பத்தைச் சுமக்க இயலாமல் வானம் நீலத்தில் வழுக்கி விழுந்தது. O அப்போது தான் இறுக்க மூடியிருந்த கையை இறைவன் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைப் போல மலர்த்திக் காட்டிய மாதம் பிறந்தது ! |