பக்கம் எண் :

172 வலம்புரி ஜான்


O

 

ஆகாயம் கிழிந்ததோ

அலைகடல் உருண்டதோ

பூமிதான் பிளந்ததோ

புவனங்கள் சரிந்ததோ

அம்மவோ ... அம்மம்மா

பேரொலி பிறந்தது.

ஒலி பிறந்த நொடிக்குள்ளே

ஒளி வெள்ளம் புகுந்தது !

திசைகள் எரிவது போல்

திகைப்பங்கே சூழ்ந்தது !

 

O

 

சில வேளைகளில்

சொல்லை விட்டும்

பொருள் தள்ளி இருப்பதைப் போல

குகைக்குள்ளே

சுடர்தான் விரிந்தது.

சூடு வெளியில் சும்மா இருந்தது.

 

O

 

அண்ணலின்

இமைப் படகுகள்

வெளிச்சக் கடலில்

முக்குளி போட்டன.

 

O

 

அந்த

விழுதுகள் முளைத்த