O வானவரின் உதட்டு நிலத்தில் வெளிச்சச் செடிக்கு பதியம் கிடைத்தது. O ‘ஓதுவீராக’ என்றது ஒளிப்புயல் ! சொற்களின் சுயம்வரமண்டபத்தில் பொருள் மயங்கி விழுந்தது ! ‘ஓத நான் அறியமாட்டேன்’ உரை பகர்ந்தார் உத்தமர். O அந்த உருவம் அருகில் வந்தது, இறுக அணைத்தது. இப்போதுரைத்தது. ‘ஓதுவீராக’. O உலர்ந்த உதடுகளை முகம்மது உண்மையால் ஈரமாக்கினார். ‘ஓதியவன் நானல்லன்’. |