O நிழலே விழாமல் நெருக்கிச் சேர்த்து அந்த உருவம் அணைத்து அண்ணலை. ‘ஓதுவீராக’ மீண்டும் ஒருமுறை மீட்டி நின்றது. O இடைவெளி இன்றி இருகரம் சேர்த்தால் வணக்கம் ஆங்கே வாயில் திறந்திடும். இறுக அணைத்தே இரு முறை சொன்னதால் அண்ணல் இம்முறை ஓதுவது எதை என்று உற்றுக் கேட்டார். O நேச வெளிச்சம் நெருங்கி வந்தது. மூன்றாம் முறை அது முழுவதும் தழுவிற்று. O மெய்யும் உயிரும் மேவியதாலே |
|
|