உயிர் மெய் எழுத்தாய் உயர்ந்தார் அண்ணல். பளிங்கு சலவைக்குப் போடப்பட்டது. பனிக்கட்டிக்கு வெள்ளாடை கட்டப்பட்டது. O வெளிச்சப் பறவையின் அலகிலிருந்து வெந்த மணிகள் விழுந்து முளைத்தன ! O ‘இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக’! அனைத்தையும் படைத்தானே ஆண்டவன் ; அவன் பெயரால் அருமையாய் ஓதுவீராக ! O அவனே உதிரக்கட்டியிலிருந்து உருவாக்கினான் மனிதனை. கொடைகளின் குடியிருப்பான உம்முடைய ஆண்டவனின் திருப்பெயரால் ஓதுவீராக ! |