பக்கம் எண் :

178 வலம்புரி ஜான்


அஞ்சல் வழிக் கல்வி

அன்று

ஆரம்பம் ஆனது.

 

O

 

விடைகள் இல்லாமல்

வினாக்கள் வெடிக்காது.

இப்போது

கேள்வி - பதில் இரண்டிற்கும்

மூச்சு திணறியது.

அண்ணலின் விளக்கம்

ஆண்டவனிடமிருந்து வந்தது.

 

O

 

முகம்மது அவர்களே!

முகம்மது அவர்களே!

நீர் ஆண்டவனின் தூதர்!

நானோ அவனது அடிமை.

ஜிப்ரயில் என்பதென் பெயராகும்.

வெளிச்சத்தின் விலாசம்

விரிவாய்க் கிடைத்தது.

 

O

 

மகிழ்ச்சியில் பறவைகள்

மங்களம் பாடின !

 

O

 

வானத்தில் அவைகள்

வடுக்களை விதைத்தன !